அதில், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது? கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? கட்டுமான பணிகள் எப்பொழுது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? ,”என்று ஒன்றிய அரசிடம் வினவினர். இதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசு, கொரோனா தொற்று காலத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது; 2025க்குள் பணிகள் முடிந்துவிடும் என்றும் தெரிவித்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,”கொரோனோ 2022ஆம் ஆண்டிலேயே முடிந்துவிட்டது; அதனை காரணம் காட்டாதீர்கள் என தெரிவித்து, தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப். 24-க்கு ஒத்திவைத்தனர்.
The post மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட காலதாமதம் ஆவதற்கு கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம் : ஒன்றிய அரசுக்கு குட்டு வைத்த ஐகோர்ட்!! appeared first on Dinakaran.