விழாவில் இந்தியன் ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீமதி கேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்கட்சியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 460 மாணவர்கள் பார்வையிட்டனர். இதில், இளம் அறிவியாளர்களான மாணவர்களின் இயங்கும் மாதிரி வடிவங்கள் மற்றும் நிலையான மாதிரி வடிவங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு மாணவர்களால் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ஸ்ரீவெங்கடேஷ் ராஜா சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கினார்.
The post சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.