இந்நிலையில் பாவெல் துரோவ் பிரான்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மாலை அஜர்பைஜானில் இருந்து பிரான்சின் போர்கெட் விமான நிலையத்தில் தரையிறங்கிய பாவெல் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
“டெலிகிராம் செயலியில் தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்வது, பணமோசடி, போதைப்பொருள் கடத்தல், சிறார்களுடன் தொடர்புடைய பாலியல் சுரண்டல் தொடர்பான செய்திகளை பகிர அனுமதித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டார்” என பிரான்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
The post குற்ற பதிவுகளை பகிர அனுமதி; டெலிகிராம் நிறுவன தலைவர் பாவெல் துரோவ் அதிரடி கைது appeared first on Dinakaran.