இதனை, அருகாமையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த தெருநாய், திடீரென பவிஷின் கையில் இருந்த தோசையை கவ்வி பிடுங்கியது. அதற்கு பிறகும், பவிஷ் முகத்தின் தாடை மற்றும் கையில் கடித்து குதறியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்வேதா, ஒரு கட்டையை எடுத்து நாயை விரட்டியடித்தார். அவரையும் அந்த நாய் கடிக்க பாய்ந்தது. அவரது, சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், நாயை அடித்து விரட்டினர். பின்னர், நாய் கடித்ததில் காயமடைந்த பவிஷை மீட்டு வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, குழந்தைகள் பிரிவில் பவிஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது தெருநாய் கடித்து குழந்தை படுகாயம்: வாலாஜாபாத் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.