இந்த நிலையில் மேற்கண்ட புதிய கிரிமினல் சட்டங்களுக்கு இந்தி மொழியில் பெயர் வைத்துள்ளதை எதிர்த்து கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ஜீவீஷ் என்பவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்திருந்தார். அதில், ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் உள்ளன. இதில் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 348ன் படி, அதிகாரபூர்வமான சட்ட நூல்கள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவுக்கு எதிராக இந்தியில் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்பாடுகள் இந்தி பேசாத மாநில மக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு மிகவும் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. மேலும் இதுபோன்ற செயல்கள் சிறுபான்மையினர் மீது மொழி திணிப்பாகவும் உள்ளது. எனவே இந்தியில் பெயர் வைத்திருப்பதை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு, கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகமது முஸ்தாக் மற்றும் நீதிபதி எஸ்.மனு அடங்கிய நேற்று அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அதேப்போன்று இந்தியில் பெயர் வைத்தமைக்கு தடை விதிக்கவும் முடியாது. இது அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post புதிய கிரிமினல் சட்டங்களின் இந்தி பெயருக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.