குவைத் இளவரசர் ஷேக் சபாவுடன் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

குவைத்: ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் பட்டத்து இளவரசரை சந்தித்து பேசினார். ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக நேற்று குவைத் புறப்பட்டு சென்றார். விமான நிலையம் சென்றிறங்கிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு குவைத் பிரதமர் அப்துல்லா அலி அல்-யஹ்யா நேரில் சென்று உற்சாக வரவேற்பளித்தார். பின்னர் குவைத் அரண்மனைக்கு சென்ற ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-சபா அல்-அஹ்மத் அல்-முபாரக் அல்-சபாவை சந்தித்து பேசினார்.

அப்போது பட்டத்து இளவரசருக்கு குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோரின் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இந்தியா – குவைத் இடையே பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நல்லெண்ண உறவுகள், நட்பை பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டனர். மேலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.

The post குவைத் இளவரசர் ஷேக் சபாவுடன் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: