வயநாடு நிவாரணம் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ரூ.50 லட்சம் நிதியுதவி

சென்னை: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். 250க்கு மேற்பட்டோரை காணவில்லை.

350க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டின் பேரழிவாக பார்க்கப்படும் இது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நிவாரண உதவியாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் ரூ.50 லட்சத்தை கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

The post வயநாடு நிவாரணம் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ரூ.50 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: