இமாச்சலில் மேகவெடிப்பு 45 பேரை காணவில்லை..!!

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லா மற்றும் மண்டியில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி 45 பேரை காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேச மாநிலம் மாண்டி அருகே தல்டுகோட் என்ற இடத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 9 பேர் காணவில்லை. மேக வெடிப்பினால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தில் வீடுகள் பலத்த சேதமடைந்தன; 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சிம்லா மாவட்டத்தில் உள்ள ராம்பூரில் சமேஜ்காட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 34 பேர் காணாமல் போயுள்ளனர். மேகவெடிப்பால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தை அடுத்து பேரிடர் மீட்பு படையினர் சிம்லா மற்றும் மண்டிக்கு விரைந்துள்ளனர்.

The post இமாச்சலில் மேகவெடிப்பு 45 பேரை காணவில்லை..!! appeared first on Dinakaran.

Related Stories: