பெரியாத்துகுறிச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்: கண்ணன் எம்எல்ஏ ஆய்வு

 

ஜெயங்கொண்டம், ஜூலை 31: மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்ட முகாம், ஆண்டிமடம் ஒன்றியம், பெரியாத்துக்குறிச்சியில் நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுபடி, ஊரகப் பகுதிகளில், மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதில், ஜெயங்கொண்டம் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியம், பெரியாத்துக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது. முகாமை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

நிகழ்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமாமகேஷ்வரன், ஆண்டிமடம் வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ஒன்றியக் குழு உறுப்பினர் ராமலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பாவாடைராயன், ராஜீவ்காந்தி, சரஸ்வதி சேகர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post பெரியாத்துகுறிச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்: கண்ணன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: