கஞ்சா வைத்திருந்த 3வாலிபர்கள் கைது

சேலம், ஜூலை 31: சேலம் மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி வீராணம் மெயின்ரோடு சீலாவரி ஏரி பகுதியில் அம்மாப்பேட்டை போலீஸ் எஸ்ஐ ராமமூர்த்தி சோதனை செய்தார். அப்போது அங்கு கஞ்சா வைத்திருந்த, பொன்னமாப்பேட்ைட புத்து மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (22) மற்றும் தில்லை நகரைச் சேர்ந்த குலாபி என்கிற விக்னேஷ் (21) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், செவ்வாய்பேட்டை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் எஸ்ஐ தமிழ்மணி சோதனை செய்தார். அப்போது கஞ்சா வைத்திருந்த சூரமங்கலம் அடுத்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பவரை கைது செய்தார்.

The post கஞ்சா வைத்திருந்த 3வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: