நிலக்கோட்டை, ஜூலை 30: கொடைரோடு அருகே பொட்டிகுளம் பிரிவு என்ற இடத்தில் செங்கோட்டையில் இருந்து சென்னை வரை சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாலிபர் ஒருவர் அடிபட்டு பலியாகி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கொடைரோடு ரயில்வே எஸ்ஐ பாஸ்கரன் மணிமாறன் தலைமையிலான போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் ஆத்தூர் தாலுகா கலிக்கம்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை (21) என்பதும், டைல்ஸ் கல் ஒட்டும் வேலை செய்து வந்ததும், சிறு வயதில் தீ விபத்தில் சிக்கிய இவருக்கு வலது பக்க கண் சரியாக தெரியாததும், காது கேட்காததும் தெரியவந்தது. மேலும் மதுரையில் உள்ள தனது சித்தி வீட்டிலிருந்து மதுபோதையில் ஊருக்கு வந்தவர் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொடைரோடு அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி appeared first on Dinakaran.
