இந்த மாத்திரை ஓபியாய்டு வலி மருந்து. இருந்தாலும் 2018ம் ஆண்டு என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இந்த மாத்திரை ஏற்றுமதி தடைசெய்யப்பட்டுள்ளது. இருப்பினும் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையில் ராஜ்கோட்டைச் சேர்ந்த வணிக ஏற்றுமதியாளர் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து ராஜ்கோட், காந்திநகர் மற்றும் காந்திதாம் ஆகிய இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
The post சுங்கத்துறையினர் பறிமுதல் குஜராத் அதானி துறைமுகத்தில் ரூ.110 கோடி போதை மாத்திரை: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்ப வைத்திருந்ததா? appeared first on Dinakaran.