குவிந்த சுற்றுலா பயணிகள்

இடைப்பாடி, ஜூலை 29: இடைப்பாடி அருகே பூலாம்பட்டி, நெருஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில், மின்சார உற்பத்தி நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை முதல் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி இடையே காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் குடும்பம் குடும்பமாக விசைப்படகில் சென்று உற்சாக சவாரி செய்து மகிழ்ந்தனர். பூலாம்பட்டி சந்தையோரத்தில் உள்ள பூங்காவில் சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ்ந்தனர். காவிரி கரையோரத்தில் உள்ள நந்தீஸ்வரர் படித்துறையில் ஆண்கள், பெண்கள் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் கைலாசநாதர் கோயில், மாட்டுக்கார பெருமாள் கோயில், மூலப்பாறை பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று செல்பி எடுத்துக் கொண்டனர். கூட்டம் அதிகளவில் காணப்பட்டதால், பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: