திண்டுக்கல்லில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவக்கம்

 

திண்டுக்கல், ஜூலை 27: திண்டுக்கல் வேலு மஹாலில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை வேலு மஹால் உரிமையாளர் பழனிச்சாமி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். உடன் ஸ்பேஸ் கிராப்ட் மேலாளர் சதீஷ், மார்வெல் மைன்ஸ் மேலாளர் வைத்தியநாதன் ஆகியோர் இருந்தனர். இக்கண்காட்சியில் தேக்கு மர ஊஞ்சல், தேக்கு மர ராஜா சோபா, நீலம்பூர் தேக்கு மர பெட் ரூம் செட்டுகள், டைனிங் டேபிள், சோபா ஆகியவை ஆடி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் விற்பனைக்கு உள்ளது. இதுதவிர பங்கர் பெட், பிளாஸ்டிக் பர்னிச்சர், மசாஜ் சேர்கள், லெக் மசாஜ், கார் மசாஜர், எலக்ட்ரிக் பைக், கவரிங் நகைகள், பவர் சேவர், மைசூர் சாண்டல் பொடர் சோப்புகள், டேங்க் கிளீனர், மஹிந்திரா கார், கொசு பேட் ஆகியவை விற்பனைக்கு உள்ளன.

The post திண்டுக்கல்லில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: