இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும்: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் 2019ல் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியால் 2022-ல் ராஜபக்சே பதவி விலகினார். 2022-ல் பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக குணவர்த்தனவும் பதவியேற்றனர்.

இலங்கையில் தற்போதைய அதிபர் பதவிக்காலம் நவம்பர் 17-ம் தேதியுடன் முடிவு பெறுவதை ஒட்டி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

 

The post இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும்: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: