கரூர், ஜூலை 26: கரூரில் இருந்து திருச்சி, புலியூர், மணப்பாறை, உப்பிடமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் காந்திகிராமம் வழியாக செல்கிறது. காந்திகிராமம் பேருந்து நிறுத்தம் அருகே வடக்கு காந்திகிராமம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மற்றும் தெற்கு காந்திகிராமம் ஆகிய பகுதிகளுக்கான சாலைகள் பிரிகிறது. இந்த சந்திப்பு பகுதியில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்கிறது.
இந்த பகுதியைச் சுற்றிலும் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு உள்ளன. எனவே, இந்த காந்திகிராமம் சந்திப்பு பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post காந்திகிராமம் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.