வடமதுரை அருகே பரபரப்பு ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

வடமதுரை, ஜூலை 26: வடமதுரை அருகே மூனாண்டிபட்டி பகுதி ஊராளிபட்டி பிரிவில் தனியார் வங்கியின் ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த ஏடிஎம்மிற்குள் முகத்தில் துணியை சுற்றியபடி நுழைந்த 2 மர்மநபர்கள் ட்ரிலிங் மிஷினை கொண்டு இயந்திரத்தை அறுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் முயற்சி செய்தும் இயந்திரத்தை அறுக்க முடியாததால் இருவரும் தப்பி விட்டனர். காலையில்தான் இக்கொள்ளை முயற்சி தெரியவந்தது. வங்கி நிர்வாகத்தினர் தகவலின்பேரில் வடமதுரை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இயந்திரத்தை அறுக்க முடியாமல் போனதால் ஏடிஎம்மில் இருந்த ரூ.4.44 லட்சம் தப்பியது.

The post வடமதுரை அருகே பரபரப்பு ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: