புதிய ஆலைக்கான கட்டுமான பணிகள் அடுத்த 2 மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அடுத்த 18 மாதங்களில் உற்பத்தி தொடங்கிவிடும் என்று LOHUM நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் மூலப்பொருட்களை அமர ராஜா, ஓலா, டிவிஎஸ், எக்சைட் போன்ற பேட்டரி ஆலைகளுக்கு வழங்கவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் தொழில் செய்ய மாநில அரசு உறுதுணையாக இருப்பதால், இங்கு ஆலையை தொடங்க ஆர்வம் காட்டுவதாக அந்நிறுவனத்தின் அதிகாரி சச்சின் மகேஸ்வரி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி ஆலையை கிருஷ்ணகிரியில் அமைக்க உள்ளது LOHUM நிறுவனம்!! appeared first on Dinakaran.