கல்லாத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 24: தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அறிவிப்பின்படி, ஊரக பகுதிகளில், மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்ட முகாமினை, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கல்லாத்தூர் ஊராட்சியில், உடையார்பாளையம் தாசில்தார் ஷீஜா தலைமை வகித்தார். எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் முகாமினை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம் (வட்டார ஊராட்சி), முத்துக்குமார் (கிராம ஊராட்சி), ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தன.சேகர், ஊராட்சிமன்ற தலைவர் செந்தமிழ் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.இரத்தப் பரிசோதனை மேலப்புலியூரில் நேற்று பொதுமக்களுக்காக நடை பெற்ற மருத்துவ முகாமை பார்வையிட்ட மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், மக்களோடு மக்களாக வரி சையில் நின்றுதானும் இரத்தஅழுத்தப் பரிசோத னை செய்துகொண்டார்.

The post கல்லாத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: