துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா

 

குன்னம் : ஜூலை 24: குன்னம் அருகேயுள்ள துங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கபடி போட்டிகள் நடைபெற்றன. துங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பெண்கள் தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு பெண்கள் பள்ளிகளுக்கிடையே கபடிப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் துங்கபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர். மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் பதக்கங்கள், சான்றிதழ் மற்றும் கேடயத்தையும் வழங்கினார். மேலும், உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை வழங்கினார். நிகழ்வில் உதவி தலைமையாசிரியர்கள் செல்வகுமார், ஆறுமுகம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post துங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா appeared first on Dinakaran.

Related Stories: