இலையூரில் மக்கள் தொடர்புத்துறை புகைப்பட கண்காட்சி: கிராமத்தினர் ஆர்வமுடன் பங்கேற்பு

 

ஜெயங்கொண்டம், ஜூலை 24: ஆண்டிமடம் அருகேயுள்ள இலையூரில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு வேளாண்மை, கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நீர்மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் ஏராளமானத் திட்டங்கள், சாதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது.

அதில், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், இலையூர் ஊராட்சியில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. அதில், தமிழ்நாடு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன, இப்புகைப்பட கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டனர்.

The post இலையூரில் மக்கள் தொடர்புத்துறை புகைப்பட கண்காட்சி: கிராமத்தினர் ஆர்வமுடன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: