கரூர் வெண்ணைமலை ரன் மெட்ரிக் பள்ளியில் நுகர்வோர் மன்றம் துவக்க விழா

 

கரூர், ஜூலை 23: வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நுகர்வோர் மன்றத்தை தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பு தலைவர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். ரூர் வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பி எம் கே பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் அமைப்பு தலைவர் சொக்கலிங்கம் கலந்து நுகர்வோர் மன்றத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: பொருட்களை வாங்கும் நுகர்வோர் பொருட்களை தமக்கு வழங்கும் நிறுவனங்களிடம் எந்த மாதிரி செயல்பட வேண்டும், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முறையீடு செய்ய வேண்டும் இழப்பீடு பெறுவதற்கு செய்ய வேண்டிய வழிமுறை பற்றி எடுத்து கூறினார். நுகர்வோர் மன்ற துணை அமைப்பாளர் சித்ரா இன்சூரன்ஸ் , காப்பீடு தொடர்பாக மாணவ மாணவியரிடம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முடிவில் துணை பாலசுப்ரமணி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post கரூர் வெண்ணைமலை ரன் மெட்ரிக் பள்ளியில் நுகர்வோர் மன்றம் துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: