சாம்பவர்வடகரை அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா

சுரண்டை,ஜூலை 23: சாம்பவர்வடகரை மேலூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஆர்ஓ (பொ) அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, பேரூராட்சி துணைத் தலைவர் நாலாயிரம், பேரூர் திமுக செயலாளர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாம்பவர் வடகரை மேலூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பகவதி வரவேற்றார். சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமிமுத்து குத்து விளக்கு ஏற்றி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பழனி குமார், சுடலைமுத்து, ரபீக் ராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post சாம்பவர்வடகரை அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: