செல்போனை திருடி ஓடிய வாலிபர் கைது

சேலம், ஜூலை 23: சேலம் நெத்திமேடு பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு காவலாளியாக ராதாகிருஷ்ணன்(58) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் 3செல்போனை அங்கு வைத்திருந்தனர். அப்போது 3 செல்போனையும் எடுத்துகொண்டு 2 பேர் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டிச்சென்ற காவலாளி ராதாகிருஷ்ணன் ஒருவரை பிடித்தார். அவர் பனங்காடு சத்யாநகரை சேர்ந்த அருள்(23) என்பதும், தப்பியவர் சிவதாபுரத்தை சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அன்னதானபட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசாரிடம் பிடிபட்ட அருளை ஒப்படைத்தனர். இதையடுத்து தலைமறைவான சரத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post செல்போனை திருடி ஓடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: