பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி: வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் நீதிமன்றம் முகப்பு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் 30க்கும் மேற்ப்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் வழக்கறிஞர்களின் படுகொலை கண்டித்தும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் வழக்கறிஞர்கள் ஜெகநாதன், சரவணன், ஆபிரகாம், தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: