க.பரமத்தி அருகே மது விற்ற முதியவர் கைது

 

க.பரமத்தி, ஜூலை 22: க.பரமத்தி அருகே அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார். க.பரமத்தி அடுத்த பூலாங்காளிவலசு பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது புதுக்கோட்டை அருகேயுள்ள கொத்தமங்கலம் ராஜாங்கம்(52) என்பவர் பூலாங்காளிவலசு பகுதியில் மது விற்பனைக்காக 4பாட்டில்கள் பதுக்கியது கண்டறியப்பட்டது. மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் சம்மந்தப்பட்டவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post க.பரமத்தி அருகே மது விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: