வீட்டு வாசலில் தடுக்கி விழுந்த வாலிபர் பலி

சேந்தமங்கலம், ஜூலை 21: எருமப்பட்டி அடுத்த காவக்காரன்பட்டி அரசமரத்து தெருவை சேர்ந்தவர் பெரியசாமி, கூலி தொழிலாளி. இவருக்கு பெருமாள், செந்தில், ராஜா, பிரியாகுமார் என்ற 4 மகன்கள் உள்ளனர். இளைய மகன் பிரியாகுமார் (28) கூலி வேலை செய்து வந்தார். கடந்த 16ம் தேதி வீட்டிற்கு சென்ற போது, வாசல்படி தடுக்கி கீழே விழுந்ததில், பிரியாகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீட்டு வாசலில் தடுக்கி விழுந்த வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: