கடலூர் அருகே ரூ.1 கோடி சுருட்டல்: இளம்பெண் சிறைப்பிடிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் விவசாயிகளிடம் முந்திரி பருப்பு கொள்முதல் செய்து ரூ.1 கோடி ஏமாற்றிய இளம்பெண் சிறைப்பிடித்தனர். சாத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த வினோலியா (25) என்பவரை முந்திரி விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த வினோலியா இன்று சொந்த ஊர் வந்திருந்தபோது விவசாயிகள் அவரை சிறைப்பிடித்தனர். சிறைப்பிடித்ததை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வினோலியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டன் கணக்கில் முந்திரி பருப்பு கொள்முதல் செய்துவிட்டு பணம் தராமல் வினோலியா அலைக்கழித்து வருவதாக புகார் எழுந்தது. வினோலியா தலைமறைவான நிலையில் விவசாயிகள் காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

The post கடலூர் அருகே ரூ.1 கோடி சுருட்டல்: இளம்பெண் சிறைப்பிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: