அப்போது சுஜாதாவை தாக்கிய புகாரில் அருண் ரெங்கராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அருண் ரெங்கராஜ், கோபிச்செட்டிப்பாளையத்திலேயே தங்கியுள்ளார்.இந்த நிலையில், இன்று அருண் ரெங்கராஜுக்கும் சுஜாதாவுக்கும் ஏற்பட்ட தகராறில் தனது வீட்டுக்கு தீ வைத்துள்ளார் அருண் ரெங்கராஜ். இது குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்க, வீட்டுக்கு தீ வைத்துக்கொண்டு உள்ளேயே இருந்த ரங்கராஜை போலீசார் மீட்டுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் காமராஜை அருண் ரெங்கராஜ் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து அருண் ரெங்கராஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குடும்பத் தகராறால் ஐபிஎஸ் அதிகாரி அருண் ரெங்கராஜ் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.