அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு

 

திருப்பூர், ஜூலை 19: திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பயன்படுத்தப்படாத பொருட்கள் வைப்பறையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து ஊழியர்கள் கதவை திறந்து பார்த்தபோது வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தது தெரியவந்தது. உடனடியாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், சடலமாக கிடந்தது அம்மாபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக காணாமல் போன விக்னேஷ் (33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

The post அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: