சீன வணிக வளாகத்தில் தீ – 16 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் பலியானார்கள். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஜிகாங் நகரின் உயர்தொழில்நுட்ப மண்டலத்தில் அமைந்துள்ள 14 மாடி கட்டிடத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பற்றியது. தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்டனர். நேற்று காலை மீட்பு பணிகள் முடிவடைந்தது. கட்டிடத்திற்குள் சிக்கியிருந்த சுமார் 75 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 16 பேர் தீயில் சிக்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். தீ விபத்து குறித்த முதல் கட்ட விசாரணையில் கட்டுமான பணியின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

The post சீன வணிக வளாகத்தில் தீ – 16 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: