போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது

தாம்பரம்: தாம்பரம் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் தலைமையில் போலீசார், தாம்பரம் பகுதியில், ரோந்துசென்ற போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தபோது, 300க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் இருந்தது. விசாரணையில், தாம்பரம், கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (23), திருவள்ளுவர் தெருவை சேர்ந்த திவாகர் (20), பழைய ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த மணியரசன் (24) என்பதும், போதை மாத்திரைகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

The post போதை மாத்திரை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: