மஞ்சுளாவுக்கு திருமணத்திற்கு சீதனமாக வழங்கிய நகைகளை பிரோம்குமார் அடகு வைத்ததாக கூறப்படுகிறது.
நகைகளை மீட்காததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை மஞ்சுளா புடவையால் தூக்கிட்டு மயங்கியுள்ளார். உறவினர்கள் மஞ்சுளாவை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் மஞ்சுளா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமணமாகி 8 மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
The post திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.