மோகனூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம திட்ட விழிப்புணர்வு முகாம்

மோகனூர், ஜூலை 16: மோகனூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜாஸ்மின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மோகனூர் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, பெரமாண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சிகள் மற்றும் குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் செயல்படுத்தபட இருக்கும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. வளையப்பட்டி சமுதாய கூடத்தில் 17ம் தேதியும், நா.புதுப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் 22ம் தேதியும், பெரமாண்டம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் 24ம் தேதியும் நடைபெற உள்ளன. இத்திட்ட விழிப்புணர்வு முகாமிற்கு அனைத்து விவசாய பெருமக்கள் உரிய ஆவணங்களுடன் வருகை தந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வழங்கும் திட்டங்களை பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மோகனூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம திட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: