கலர் கோழிக்குஞ்சு விற்பனை களை கட்டியது

 

கரூர், ஜூலை 13: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கலர் கோழிக்குஞ்சு விற்பனை களை கட்டி வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், தாந்தோணிமலை, சுங்ககேட் போன்ற பல்வேறு பகுதிகளில் அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல், மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் கண்களை கவரும் வகையில் வர்ணம் கொண்ட கலர் குஞ்சுகள் தர்மபுரி மாவட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இதன் வர்ணத்தை பார்த்து, தங்கள் வீடுகளில் வளர்க்கும் வகையில் விதமான விதமான கலர்களில் வைக்கப்பட்டுள்ள குஞ்சுகளை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கலர் கோழிக்குஞ்சு விற்பனை களை கட்டியது appeared first on Dinakaran.

Related Stories: