குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்குப்பின் வெளிநாடுகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தரவுகளின்படி 2014-2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய குடியுரிமையை துறந்தவர்களின் எண்ணிக்கையில் குஜராத் மாநிலம் 3ம் இடத்தில் உள்ளது. 60,414 குடியுரிமையைத் துறந்து டெல்லி முதலிடத்திலும் 28,117 பேருடன் பஞ்சாப் 2ம் இடத்திலும் வகிக்கின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடியுரிமையைத் துறப்பது ஆண்டுக்காண்டு அதிகரிப்பதற்கு உயர்கல்விக்காக வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள் படிப்பை முடித்து அங்கேயே பணியமர்ந்து அந்நாட்டின் குடியுரிமை பெற்றுவிடுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கைக்காக தொழில் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதும் காரணமாக கூறப்படுகிறது. போதிய மரங்களுடன் பசுமை இல்லாததும் சாலைகள் மோசமாக உள்ளதும் கூட குஜராத் மாநிலத்தவர்கள் வெளிநாடுகளில் வாழ விரும்புவதற்கு காரணமாக கூறப்படுகிறது.
The post இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாட்டில் குடியேறும் மக்கள்.. டெல்லி முதலிடம், பஞ்சாப் 2ம் இடம், குஜராத் 3ம் இடம்!! appeared first on Dinakaran.