இந்த நிலையில் ஒன்றிய பட்ஜெட் தயாரிப்பு, நாட்டின் நிதி நிலைமை, வாய்ப்புகள் குறித்து பொருளாதார வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெர்ரி ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். மேலும் இந்த கூட்டத்தில் தங்களது பரிந்துரைகளை பொருளாதார வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள் வழங்குவார்கள். மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையின் போது, பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதனால் இந்த பட்ஜெட்டில் நிறைய மாற்றங்கள் இருக்கும். முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடினார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
The post 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: தொழில்துறை வல்லுநர்களும் பங்கேற்பு appeared first on Dinakaran.