இதன் மூலமாக கள்ளக்குறிச்சி விஷ சாராயம் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட முருகேசன் மற்றும் பரமசிவம் இருவரையும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்த நிலையில் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி கைது செய்யப்பட்ட முருகேசன் மற்றும் பரமசிவம் ஆகிய இருவரையும் ஒரு நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து காவலில் எடுக்கப்பட்டுள்ள முருகேசன் மற்றும் பரமசிவம் ஆகிய இருவரிடமும் எங்கெங்கெல்லாம் சாராயம் விற்பனை செய்தனர் யார் யாருக்கெல்லாம் சாராயம் விற்பனை செய்தனர் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
The post கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 22 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி appeared first on Dinakaran.