தேசிய நெடுஞ்சாலைவேலூர், வேட்டவளம், திருவையாறு உள்ளிட்டப் பகுதிகளில் பைபாஸ் சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பதிலாக மாநில நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளவிருக்கிறது. இந்த திட்டப் பணிகளுக்கான மதிப்பு ரூ.559.17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை – சத்தியமங்கலம் – தமிழகம் – கர்நாடக எல்லைச் சாலை அமைக்கும் பணிகளுக்கு ரூ.639.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிழக்கு கடற்கரைச் சாலை முதல் தூத்துக்குடி – கன்னியாகுமரி இடையே திருச்செந்துர் வழியாக 120 கிலோ மீட்டர் சாலையை அகலப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இதற்குத் தேவையான நிலத்தை பெறுவதற்காக ரூ.393.33 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
The post தேசிய நெடுஞ்சாலை பணிகளை முதல் முறையாக மேற்கொள்ளும் மாநில நெடுஞ்சாலைத்துறை: பணிச்சுமையை குறைக்க அதிரடி நடவடிக்கை!! appeared first on Dinakaran.