அதேபோல், அன்றைய தினம் விழுப்புரம் மாவட்டம் நீங்கலாக மற்ற மாவட்டங்களிலும் சார்ந்த அமைச்சர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைக்கவுள்ளனர். மக்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெற உள்ள ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்களில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் மக்கள் எவ்வாறு பயன் பெற்று வருகின்றனர் என்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
The post ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை நாளை தருமபுரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.