₹45 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை

அயோத்தியாப்பட்டணம், ஜூலை 9: அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், திங்கட்கிழமை தோறும், மாட்டு சந்தை கூடுவது வழக்கம். நேற்று அதிகாலை 4 மணி அளவில் கூடிய வார சந்தைக்கு, 1,900 மாடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். ஜெர்சி, மாடு, காங்கேயம், கன்றுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கன்றுகள் ₹4 ஆயிரம் முதல் ₹7 ஆயிரம் வரையும், மற்ற மாடுகள் ₹10 ஆயிரம் முதல் ₹55 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று கூடிய வார சந்தையில் ₹45 லட்சம் வரை மாடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹45 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: