இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் அப்பெண்ணின் வீட்டுக்கு சூரியபிரகாஷ் சென்றபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினாராம். இதனால் பயந்துபோன அப்பெண் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டில் விடுவதற்காக வெளியே வந்ததாக தெரிகிறது. சிறிதுநேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது சடலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதுபற்றி சூர்யபிரகாஷின் மனைவி பார்வதி பண்ருட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கணவரை அடித்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
The post கள்ளக்காதலி வீட்டுக்கு சென்ற நடிகர் விஜய் கட்சி பிரமுகர் மர்ம சாவு appeared first on Dinakaran.