திருப்பராய்த்துறை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து

ஜீயபுரம், ஜூலை 7:திருப்பராயத்துறை அருகே வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். திருப்பராய்த்துறை அருகே உள்ள எலமனூர் அண்ணாநகரை சேர்ந்தவர் மோகன்ராஜ்(27). இவரது உறவினர் பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(26) என்பவர் திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததால் கார்த்திக் மனைவி கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த மோகன்ராஜ் கார்த்திக்கிடம் சென்று எனது உறவினர் பெண்ணை ஏன் கொடுமை படுத்துகிறாய் என கேட்டுள்ளார். இதில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதில் கார்த்திக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன்ராஜை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மோகன்ராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மோகன்ராஜ் ஜீயபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

The post திருப்பராய்த்துறை அருகே வாலிபருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Related Stories: