3 பேருக்கு கத்திக்குத்து அதிமுக கவுன்சிலர் குண்டாசில் கைது

களக்காடு: நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடி நம்பிதலைவன் பட்டயத்தை சேர்ந்தவர் இளங்காமணி. இவர் திருக்குறுங்குடி பேரூராட்சி 3வது வார்டு அதிமுக கவுன்சிலர் ஆவார். இவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், அடிதடி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14ம் தேதி நம்பி தலைவன் பட்டம் கிராமத்தில் உள்ள இசக்கி அம்மன் கோயிலில் அதே ஊரைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நம்பிராஜன், அவரது மனைவி கஸ்தூரி, அவரது மருமகன் மணிகண்டன் ஆகியோரை இளங்காமணி கத்தியால் சரமாரியாக குத்தினார். இதுதொடர்பாக இலங்காமணியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இலங்காமணி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

The post 3 பேருக்கு கத்திக்குத்து அதிமுக கவுன்சிலர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: