திருமலைக்கேணி கார்த்திகை விழா

கோபால்பட்டி, ஜூலை 3: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி மாத கார்த்திகை பூஜை நடந்தது. இதையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

The post திருமலைக்கேணி கார்த்திகை விழா appeared first on Dinakaran.

Related Stories: