எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை: தொடரும் அட்டூழியம்

சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்களை 4 நாட்டுப் படகுகளுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது; கைது செய்யப்பட்ட 24 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்து செல்லும் போக்கு தொடர் கதையாகி வருகிறது.

அதில் இன்றைய தினமும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று காலை தனுஷ்கோடியில் இருந்து 4 நாட்டு படகுகளில் 25 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 25 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களது நான்கு படகுகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இது மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. வழக்கமாக விசைப்படகு மீனவர்கள் தான் எல்லை தாண்டி செல்வர்.

மீன்கள் கிடைக்காமல் இருந்தால் தொடர்ந்து நகர்ந்து கொண்டே சென்று விடுவர். இது சிக்கலில் கொண்டு போய் நிறுத்தி விடும். ஆனால் நாட்டுப் படகு மீனவர்கள் அப்படியில்லை. பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடங்களில் தான் மீன் பிடிப்பர். அரிதாக காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் எல்லை தாண்ட வாய்ப்புள்ளது. ஆனால் இன்று நடந்த சம்பவம் என்பது அப்படி அல்ல. கச்சத்தீவு அருகே தான் மேற்சொன்ன 4 நாட்டு படகுகளில் சென்ற மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 24 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை: தொடரும் அட்டூழியம் appeared first on Dinakaran.

Related Stories: