இது ஒரு பழிவாங்கும் வித்தியாசமான கதை என்றும் இந்த படத்தில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டு வித்தியாசமான கெட்டப் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுதன் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை 85 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே 50 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மட்டும் இன்னும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக நடிகர்களின் 50வது படம் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படும் நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post தனது 50வது படத்தில் 2 கெட்டப்களில் நடிக்கும் விஜய் சேதுபதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.