இந்த சட்டத் திருத்தங்கள் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும், வழக்கறிஞர் சங்கங்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக, சார்பு நீதிமன்ற வாயிலில் ஒன்றிய நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று மாநிலம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே பேரணியாக சென்று ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
The post ஒன்றிய பாஜ அரசின் 3 சட்ட திருத்தத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.