9 மணி நேரம் பற்றி எரிந்த வணிக வளாகம்


தர்மபுரி: தர்மபுரி நேதாஜி பை-பாஸ் சாலையில், கணேசா தியேட்டர் வணிக வளாகம் உள்ளது. இங்கு தர்மபுரியை சேர்ந்த மனோகரன்(50) பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இந்த கடையில் இருந்து, நேற்று அதிகாலை சுமார் 12.45 மணியளவில், கரும்புகை வெளியேறி சிறிது நேரத்தில் தீப்பற்றி அருகே உள்ள டீக்கடை, பர்னிச்சர் கடையின் குடோன், நகை கடை, சவுத் இந்தியன் வங்கி மற்றும் அப்பகுதியில் இருந்த 2 வீடுகளுக்கும் பரவியது.

தகவலறிந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்த 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், சுமார் 9 மணி நேர போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து காலை 9 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும், கரும் புகை நேற்று மாலை வரை வந்து கொண்டே இருந்தது. இந்த விபத்தில் கோடிக்கணக்கான மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

The post 9 மணி நேரம் பற்றி எரிந்த வணிக வளாகம் appeared first on Dinakaran.

Related Stories: