கொல்லப்பட்ட ஆண் நபர் சுல்தான் பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் அந்த பெண் சடலா கிராமத்தை சேர்ந்தவர் என்றும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் 7 தோட்டாக்களை போலீசார் மீட்டனர். பின்னர் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உடலில் 4, 5 தோட்டா காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. கொலை நிகழ்ந்ததை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொள்வதற்காக தம்பதியினரின் கிராமத்திற்கு விரைந்தனர். இது ஆவண கொலையாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
The post ஹரியானாவில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.